தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் நடத்திய கர்நாடக மண்டல தர்பியா


பெங்களூர் :


கர்நாடக மாநிலம் பெங்களூரில்தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் நடத்திய கர்நாடக மண்டல தர்பியா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.


கர்நாடக மண்டல தலைமை ஏற்பாடு செய்திருந்த, நிர்வாகிகளுக்கான ஒரு நாள் பயிற்சி தர்பியா நிகழிச்சி 15 -12 - 2013, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் குயின்ஸ் ரோட்டில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம்' யில் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இந்த தர்பியாவில் சகோ. M I சுலைமான், சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ், சகோ.அப்துல் நாசிர், சகோ.செய்யது இப்ராஹீம், சகோ.அய்யூப் கான் ஆகியோர் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பயிற்சி உரையாற்றினார்கள். இது அனைத்து நிர்வாகிகளுக்கும் மட்டும் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்திருந்த உறுப்பினர்களுக்கும் உற்சாகத்தையும், புதிய உத்வேகத்தையும்ம நிவாக செய்வதன் அவசியத்தையும், ஆழ்ந்த அறிவையும், ஏகத்துவ கொள்கையில் உறுதியையும் தந்தது.  இறைவனுக்கே புகழனைத்தும்.